07 அக்டோபர், 2021

கொஞ்சல்

 கொஞ்சல்


சரிப்பா ஒரு பன்னிரண்டு மணி வரை லாப்டாப்புடன் கொஞ்சிக்கிட்டிருப்போம். கூகிள் கீப் -ல் இன்றைக்கான பிளாக் போஸ்ட்டுக்கு எதாவது எழுதுவோம்.

சரி. லாப்டாப் அம்மா ரூமிலே உள்ளது.


நேற்று மாலை திருமகுண்டனஹள்ளிப் பிள்ளையாரை மனைவியுடன் காரில் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.


அப்படியே சந்தாப்பூர் over bridge வரை சென்று பெண்டாட்டி உதிரிப் பூக்கள் வாங்கிக்கொள்ள உதவி செய்தேன். ஆனவரை அவளை திருப்தி படுத்துவது நோக்கம். ஆனால் அது பல சமயம் backfire ஆகி விடும். ஆகட்டும்.


புலம்ப மாட்டேன். பிள்ளையாரப்பா புலம்பவே மாட்டேன் - புதனும் வியாழனும் காலம்பற 5:45 மணி அலாரத்திற்கு எழுந்திருக்கவில்லை, பிள்ளையார் கோவிலுக்கு நடந்து செல்லவில்லை என்றெல்லாம் புலம்பவே மாட்டேன்.


இன்று மாலையும் பிள்ளையார் கோவிலுக்கு மனைவியுடன் செல்ல விரும்புகிறேன். 


சரி கொஞ்சல் என்று தலைப்பு போட்டுக் கொண்டாயே, எப்படியிருந்தது லேப்டாப் கொஞ்சல்?


பேஷாக இருந்தது. 12:30 வரை இதை எழுதிக் கொண்டிருந்தேன்.



கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்