04 அக்டோபர், 2021

கோபமாக இருக்கிறேன் கணபதி

'கோபமாய் இருக்கிறேன் கணபதி' என்று டெலிகிராஃபில் என்னுடைய கோபமெல்லாம் எழுதி வைத்திருந்தேன்.
அட சட்.
கோபமாய் நான் எழுதியது எங்கேயோ காணம். அதற்கு கூட கோபம் வந்து விட்டது.
இப்ப கோப மூட் போய்விட்டது கணபதி.
எதற்கு கோபப் பட்டேன் என்றால்:
1. லேட்டாக எழுந்தேன். உன் கோவிலை நோக்கி வேண்டுதல்களுடன் நடக்கவில்லை. நடப்பது நடக்கவில்லை.
2. அம்மா ரொம்ப சீரியஸ்ஸான பாவத்துடன் அவளை கண் டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும் என்று சொல்கிறாள். எனக்கு பாவமாக உள்ளது. நான் பாவப்பட்டால் முடியுமா? பெண்டாட்டியும் சேர்ந்து மனது வைக்க வேண்டும். அம்மாவால் டி.வி பார்க்க முடிகிறது. படிக்க முடிவதில்லை. சரி இருக்கட்டும் இந்தக் கோபம்.
3. கார் முப்பதாயிரம் செலவுடன் க்ளட்ச் மற்றும் அடி வாங்கிய இடங்களை சரி செய்து வந்திருக்கிறது. பெண்டாட்டி not satisfied. இன்னம் காருக்கு சில இடங்களில் சிராய்பு உள்ளது. காரை எப்படி காரேஜுக்கு எடுத்துப் போவது? அவன் என்ன சொல்வான்? பார்ப்போம் பெண்டாட்டி போக்கிலேயே விட்டு வைப்போம்.

Mind clear ஆகீடுச்சு பகவானே. இப்ப ஒரு மதிய napபிற்கு பிறகு ரொம்ப தெளிவாகவே இருக்கிறேன். இப்ப just, just உன்னிடம் வேண்டிக் கொள்வதற்காக தினமும் நான் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதை வேண்டிக் கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்