11 அக்டோபர், 2021

ரஜத்

 

Gunas

(image credit https://www.unbrokenself.com/the-three-gunas-a-revolutionary-model-for-mastering-your-mind-and-life/)


ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அதாவது ரஜத் குணத்தால் இங்கு எழுத வந்திருக்கிரேனா?

நல்ல சத்வ குணம் தற்பொழுது மனதில் குடி கொண்டிருப்பதால் எழுத வந்திருக்கிரேனா?

அல்லது தமோ குணம் மனதிலும் உடலிலும் இல்லாதிருப்பது இங்கு எழுத வரக் காரணமோ? 

மனம் இப்படி ஆராய்சி செய்வது இந்த மூன்று குணங்களைப் பற்றி என்றால் என்ன விஷயம்?

மூன்று குணங்களின் கலவை மனதில் பரவியிருப்பதை அனுபவித்தல் என்பது தான் விஷயம்.

அனுபவித்தல் என்பது ….. ம் ம் ம்... ரஜத் குணமா அல்லது சாத்வீக குணமா? 

எழுதுவதை ஒரு செயலாக செய்வது தாமோவா? என்ன எழுதுகிறேன் என்று ஒரு ஈடுபாடு கொண்டு செய்வது ரஜோ குணம் என்று வைத்துக் கொள்ளலாமா? எழுதுவது ஒரு நல்ல செய்தி என்றால் அது சத் குணமென்று வைத்துக் கொள்ளலாம்.

நாம் செய்து கொண்டிருப்பதை/ செய்யாமலிருப்பதை  மனம் இந்த மூன்று குணங்களின் விழிப்புணர்வுடன் அசை போட்டால் ஒரு தனி அனுபவம்.



கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்