06 செப்டம்பர், 2013

இந்தவாரம் எந்தப் பத்திரிக்கை வாங்கிப் படித்தீர்கள்?



பெரிய சைஸ் ‘கல்கி’ படிக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய ஆபிசர் சாருக்கு நன்றி. அவர் வாங்கி வந்த இதழை ‘படிச்சூட்டுக் கொடுங்கோ’ என்று அன்பாகக் கொடுத்தார். கல்கியில் பிரபஞ்சனின் மகாபாரத பாத்திரங்கள் பற்றிய கட்டுரைத் தொடர் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த இதழில் ‘விதுர’னைப்  பற்றிய கட்டுரை வந்துள்ளது. குவிக்காகப் படித்தேன்.


அடுத்த இதழில் பிரபஞ்சன் எழுதப் போவது குந்தியைப் பற்றி. தொடராகப்  படிக்க ஆசைதான். படிக்கும் wish list - ல் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தராசு பதில் நன்றாக இருக்கும் கல்கி பத்திரிகையில். ஞானி ‘ஓ பக்கங்கள்’ எழுதுகிறார். ஓ பக்கங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். விகடனிலும் குமுதத்திலும் அவ்வப்போது ஓ பக்கங்கள்  படித்ததாக ஞாபகம். இந்த இதழில் பாரிஸ்  கட்டுரை எழுதியுள்ளார் ஞானி. பாரி என்று உச்சரிக்க வேண்டுமாம். கடைசிப் பக்கத்தில் IAS  அதிகாரி ஒருவரின் மாநில பிரிவினை குறித்தக்  கட்டுரையும் ஜம்மென்றிருந்தது.


ஆக இந்த தடவை நான் படித்த பத்திரிகை ‘கல்கி’  
சுருக்கமாக எனது கல்கி அனுபவங்கள்  :
1) பி.வி ஆர் எழுதிய ‘சென்ட்ரல்’ நவீனம்.
2)கி. ராஜேந்திரன் எழுதிய ‘சைக்கோ’ நவீனம்.
3) கடுகு என் கேள்வி ஒன்றுக்கு  பதிலளித்து - ஐம்பது ரூபாய்கள் பரிசு கொடுத்த மகிழ்சி
4)எங்கள் திருமண நாள் சந்தர்ப்பமொன்றில் ‘தராசு’ பதிலளித்த சுவாரஸ்யம் மறக்க முடியாது . அதாவது, எனது மற்றும் எனது மனைவியின் கேள்விக்கும், பதில் ஒரே இதழில் வெளிவந்தது.
5)கல்கியில் பொதுவாக இந்த வார விஷயங்களின் விமர்சினக் கடிதங்கள் ஒரு வாரம் விட்டு பிரசுரமாகும். அந்த விதத்தில் ராஜேஷ்குமார் எழுதிய நவீனமொன்றிர்கான  என்னுடைய விமர்சினக் கடிதமும் பிரசுரமாயிற்று.
6)’முக்காலி முக்கு’ என்ற சொற்றொடர் இடம் பெரும் ‘சுஜாதா’வின் நாவலொன்றை வாசித்தததும்  கல்கியிலே
8)பொன்னியின் செல்வன்.
அடுத்தக் கேள்வி "சில வெப் ஷாட் " படங்களெல்லாம் உங்கள் ப்ளாகிலிருந்து போய்விட்டதே. என்ன செய்யப் போகிறீர்கள்?

01 செப்டம்பர், 2013

சந்தோஷமாக அடிக்கடி என் எழுத வருவதில்லை?

சந்தோஷமாக  எழுதுவதற்கு தினந்தோரும்  வர ஆசைதான். ஆசை  இருந்தால்  போதுமா? சரக்கு வேண்டாமா?  எழுதுவதற்கான சரக்குத் தான். வேறெந்த சரக்கையும் மனதில் கொள்ளவில்லை. முயற்சிப்போம். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையேனும் சந்தோஷமாக நல்ல சரக்கை கேள்வி பதில் பாணியில் இங்கு எழுதுவோம்.


கடவுளின் அருள்