06 அக்டோபர், 2021

பெண்டாட்டி

 நேற்று மாலை மழை பெய்வது மாதிரி இருந்தது. நடக்க தொடங்கி.... இஸ்தரிக்கு கொடுத்ததை வாங்கி வந்து விட்டேன். (ஒரு உருப்படிக்கு பத்து ரூபாய்கள். உருப்படிகளை பீரோவில் எடுத்து வைக்க வேண்டும்)


பிறகு மனைவியை கூட்டிக் கொண்டு காரில் கணேசன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.


நல்லாயிருந்தது.


நம்ம ஸ்வாமி சத் விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.


நல்லாத்தான் சொல்றார்.


இன்று காலம்பற அந்த garage போகும் வேலை இனிதே நடந்தேறியது.


பெண்டாட்டிக்கு குஷி.


அந்த காரஜ் நல்ல மனிதனுக்கும் ₹ 200 தட்சணை கொடுத்தேன்.


ஆக கார் அலங்காரம் முடிந்தது.


பெண்டாட்டியும் நானும் பாத்திர கடை சென்றிருந்தோம். பழைய பாத்திரங்களை கொடுத்து புது பாத்திரங்கள் வாங்கிகொண்டாள் மனைவி.


ஆனந்த் நகைக் கடைக்குச் சென்றிருந்தோம். அங்கு மனைவி சில தோடுகளை பாலீஷுக்கு கொடுத்தாள்.


மனைவியை கூட்டிக் கொண்டு வெளியே செல்லும் வைபவம் இது.


அப்புறம் அந்த பேக்கரிக்கு சென்றதை எழுத மறந்தேனே!


கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்