22 மே, 2009

அம்மா, பெண்டாட்டி


என் அம்மாவுக்கு ஏதாவது அன்பாக செய்தால் பெண்டாட்டிக்கு ஏன் சார் கோபம் வருது?
சார் அதனால நீங்கள் மனதை தளர விடாதீங்க. மனைவியிடம் நீங்கள் ரொம்ப 'தாய் பாசக்காரர்' என்று நிரூபிக்கத் தேவையில்லை. அப்புறம் ஒரு நாள் (உங்களுக்கு மகனிருந்தால்) உங்கள் மனைவியின் மருமகள் அவங்களை சரியாக கவனித்துக் கொள்வாள்.
வீரமாக மனைவியை திட்டாதீங்க. மிக மிக அமைதியாக பழி வாங்குங்க உங்கள் மனைவியை! அம்மாவுக்கு இன்னும் இரட்டிப்பாக நல்லது செய்யுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயமுங்க: அவங்க மாமியாருக்கு நல்லது செய்யும்பொழுது அவங்களுக்கு எரிச்சல் வரவில்லை என்றால்தான் - மனைவிக்கு எதோ கோளாறு என்று அர்த்தம்.
ஏன் பிளாக் செய்கிறேன் எதற்கு செய்கிறேன் எப்படி செய்கிறேன் எங்கு செய்கிறேன் இதையெல்லாம் யோசித்து, வரும் எண்ணங்களை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

இந்த ப்ளாகை மேலும் அலங்கரிக்க ஒரு படம் மற்றும் லிங்க் சேர்கிறேன். தலைப்பை கிளிக் செய்தால் அருமையான ஒரு அம்மா கவிதை.

04 மே, 2009

அது ஒரு நிலாக்காலம்.

எழுத்தாளர் சுஜாதாதிரைப்படத்தில் தோன்றும் காட்சி பார்த்ததுண்டா?
ஆமாங்க சமீபத்தில் லோக்சபா சானலில் பார்க்கும் யோகம் கிடைத்தது.
படம்: 'அது ஒரு நிலாக்காலம்'
சுஜாதாஅவர் மனைவியுடன் அந்த தியேட்டருக்கு வருகிறார் காரில். பொடியர்கள், அமரும் புள்ளியும் ப்ளாக் டிக்கெட் விக்கிறார்கள். புள்ளி சல்லீஸாக சுஜாதாவின் பேனாவை லவுட்டுகிறான்.
சீர்திருத்தப் பள்ளியில் அந்த வேலைக்காரப் பையன்கள் விதிவசத்தால் விழுந்த பயன் அது.
அந்த தியேட்டரில் இவர்கள் இந்த நிலைக்கான, இந்தப் பையன்கள் கடத்தியதாக கருதப்பட்ட 'நிலா' நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாவம் சிறுவர்கள். ஒரு நிலாக்காலத்தில் மாத்திரம் அவர்களால் நிலவுடன் விளையாட முடிந்தது.
Great சுஜாதா!
அடுத்த பதிவுக்கும் ஒரு கேள்வி பதில் தயார் பண்ணி விட்டேன் சார்!!

கடவுளின் அருள்