மாலையில் சூரியன் மறைவது என்?
உலகத்தில் நடக்கும் துன்பங்களை காணமுடியாமல் சூரியன் மறைகிறானாம்!
கருவாச்சிக்கு முதலில் துன்பங்கள் தொடங்குவது கட்டையனால்.
கட்டையன் அவளை திருமணம் செய்து கொண்டவன்.
முன்னொரு காலத்தில் கருவாச்சி குடம்பத்தினரால் பாதிக்கப்பட்ட கட்டையனின் தகப்பன், அந்த குடும்பத்தை பழி வாங்க தன் மகனை கருவாச்சிக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
கட்டையன் தகப்பன் பெயர் என்ன?
எனது குறிப்புக்களிலிருந்து கண்டுபிடித்துவிடலாம்!
அந்த பழைய பகைமை என்ன?
சுத்தமாக மறந்து போச்சு!
வருகிறேன் அடுத்த பதிவில் கட்டையன் தகப்பன் பெயரோடு!
25 ஏப்ரல், 2008
13 ஏப்ரல், 2008
கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன்.
கூகிள் டிரான்ஸ்ளிலிட்டறேஷன் பக்கத்தில் எழுதுவது அவ்வளவாக பழகமாகவில்லை.
கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன். ஒரு நண்பர் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்த்ததை வைரமுத்து விவரித்திருந்ததை சிலாகித்திருந்தார்.
இது மாதிரி பல பல சம்பவங்கள் ......அவ்வப்போது ஞாபகம் வரும்.
எழுதுகிறேன்.
கருவாச்சி காவியத்தை என் மனைவியும் நானும் சேர்ந்து ரசித்துப் படித்தோம்.
வாழ்க்கையே துன்பமானதுதான். அதில் மகிழ்ச்சியை கண்டெடுப்பது ஒரு ரசனை.
அதுவும் கருவாச்சியின் துன்பங்கள் முன்னால் நமக்கிருக்கும் துன்பங்கள் ஒன்றுமேயில்லை!
அவள் பெற்ற துன்ப-இன்பங்களை இங்கே கொணர முயற்சிக்கிறேன்.
கொஞ்சம் சீக்கிரமாக என்னுடைய பழங்குறிப்புக்களையும் கற்பனையும் சேர்த்தால் நல்ல பதிவுகளாக பதிக்கலாம்.
செய்கிறேன். சீக்கிரமாக.
அடுத்த பதிவு விரைவில்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)