18 அக்டோபர், 2021

இழை

எழுத்துக்களை எழுதும் பொழுது சில சமயங்களில் எண்ண ஓட்டங்கள் பிரமாதமாக ஓடுகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த போஸ்டிங் ‘மழை’ எழுதும் பொழுது சும்மா மழை பெய்வது மாதிரி ஒரு நூறு போஸ்டிங்களுக்கு வேண்டிய எண்ணங்கள் மனதிலே வந்தது. 

டூ வீலர் கும்பல், தேன் கூடு மாதிரி இருந்தது என்ற எண்ணத்தை ஒரு கவிதையாக வடிக்கலாம் என்று தோன்றியது.

எண்ண இழைகளும், எழுதும் செயலும் அப்படியே ஒரு அனுபவமாகச் சென்றது. எழுத்திலே வடிக்கவில்லை. எண்ணங்கள் மறந்து போயின.

அடுத்த மூன்று நாட்கள் போஸ்டிங்கே நடக்கவில்லை. எண்ண இழைகளும் மாறியது.

மகன் மேல் இருந்த கரிசனம், அவன் தூங்கு மூஞ்சியாகவும், அவன் ‘சள்சள்’ பேச்சுக்களாலும், பிசிகல் அலட்டலில்லாமல் ஒரு விடியோ கேமையே ஆடிக்கொண்டிருப்பதாலும் கோபமாக மாறியது.

பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லையென்றால் எப்படி தொப்பை குறையும்?

கணபதியே வந்தனம். கணபதியிடம் வேண்டும் இழையும், நடையும் கூட சல்லீஸாக விட்டுப் போகிறது.

கணபதியே நன்றி. என் வேண்டுதல்களுக்கு நல்ல போல் செவி கொடுத்து அருள் பாவித்துக் கொண்டிருக்கிறாய்.


கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்