08 பிப்ரவரி, 2008

பட்டியல்


== தமிழ்ப் பழமொழிகள் ==
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
(from Wiki quote)விக்கிகோட்டுக்கு.

விக்கி ஞாநி சென்றிருந்தபோது:-

கற்கள் தடைகள் இவைகளை நாம் நீக்கத்தான் செய்ய வேண்டும்.
முடியாதபொழுது ஞாநியின் சொற்கள் ஓ.கே.



விக்கி ஞாநி இணைய விலாசம்:-http://nyani.wikispaces.com/
விக்கியில் பல பல விஷயங்கள் உள்ளன.
விக்கி அகராதி, விக்கி ஸ்பேஸஸ்..........இந்த தடவை ஸ்பேஸஸுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

##################################################################

குமுதத்தில் வரும் கேள்வி பதில் பகுதியை செம்பட நிர்வாகம் செய்கிறார் வைரமுத்து.

விஞ்ஞானமாகட்டும், ஞானமாகட்டும் அல்லது நகைச்சுவையாகட்டும் அவருடைய நிர்வாகம் திறம்பட செயல் படுகிறது.

அதுவும் அவரின் பட்டியல் பதில்கள் மிகவும் சுவையானது.
ஒரு பதிலில் அவர் தமிழ் கதாநாயகர்களுக்கு எழுதிய, அவருக்கு விருப்பமான பாடல்களை பட்டியல்யிடுகிறார்.

அதில் எனக்குப் பிடித்தமான, ஞாபகமுள்ள வரிகளை பட்டியலிடுகிறேன்:

எம்.ஜி.ஆர். - கலைஞருடன் இருந்த நட்பால் எம்.ஜி.ஆரிடம் அதிகம் பழகவில்லை என்று குறிப்பிடும் வைரமுத்து அஞ்சலிப்பாடலாக 'சந்தனப் பேழையிலே' என்ற பாடலை தனக்குப் பிடித்ததாக பட்டியலிடுகிறார்.
சிவாஜி - முதல் மரியாதை படத்தில் வரும் 'பூங்காற்றே திரும்புமா' பாடலை பட்டியலில் தேர்வு செய்திருந்தார்.
கமல்ஹாசன் - "அந்தி மழை பொழிகிறது..." (ராஜபார்வை)
ரஜினிகாந்த். - "ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்" (படிக்காதவன்)
சிவக்குமார் - "கலைவணியே....." (சிந்து பைரவி)
பாக்கியராஜ் - "எண்ணிய எண்ணங்கள் ஈடேற...." (அந்த ஏழு நாட்கள்)

பட்டியல் போடுவது - இன்ப பட்டியலோ, துன்ப பட்டியலோ, சாதித்த பட்டியலோ, சாதிக்க இயலாமல் போனவைகளோ, முயற்சிகளோ, நம்மிடம் உள்ள நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ - ஒரு சாதனைதான்.

நிதானமாக பட்டியல் போட்டு நிதானமாக அவைகளை அசை போடுவது ஒரு மஜா.
ஓரிடத்தில் அவைகளை அவ்வப்போது பட்டியல் போட முயற்சித்து சில பட்டியல்கள் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் மனைவி எனக்கு கட்டிக்கொடுத்த சாப்பாடுகளின் பட்டியல்.

இங்கு 'சும்மா' அதை போட்டிருக்கிறேன்.
List of lunch office carried to office.
1. Idly
2. Lemon rice.
3. Coconut rice.
4. Radish sambar rice. Beans curry.
5. Thiruvathirai kali, kootu.
6. Besi bele bath appalam.
7. Vangibath - cut cucumber.

வாழ்க பெண்டாட்டி!


சிவாஜி படத்தில் வரும் இந்த வைரமுத்து வரிகள்:
"ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது......நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது"அருமையான வரிகள்.

இப்பொழுது காதல் கீதல் சந்தர்பத்திற்கு இந்த வரிகள் எனக்கு உபயோகப்படாது.

வரிகளை இப்படி பயன் படுத்திக்கொள்கிறேன்.

"மூன்றாண்டுகளாக சேமித்த காசிது.....
மூன்று நிமிஷங்கள் தாண்டியும் வாழ்ந்தால் அதிசியமிது....."


"மூன்று வாரங்களாக சேமித்த எண்ணமிது....
மூன்று நாட்களில் எழுத இழுக்குது....."

அடுத்தது வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் ஆகிய புதினங்களிலிருந்து நான் சேமித்த எண்ணங்களை எவ்வளவு தூரம் எழுத்தில் கொணர்கிறேன் என்பதை முயற்சி செய்யப்போகிறேன்!!

கடவுளின் அருள்