05 அக்டோபர், 2021

நமஸ்காரம்

 கணபதி, நமஸ்காரம்.

அந்த hundred words சைடிலே English ல நூறு வார்த்தைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கரெக்டாக நூறு வார்த்தைகள். அது மாதிரி பிளாகர்ல நூறு வார்த்தைகள் எழுத தொடங்கியுள்ளேன்.

ஓரிரண்டு பதிவுகளை நூறு வார்த்தைகளுக்கு மேல் இருக்க விட்டு விட்டேன். ஒரு பதிவு நூறு வார்த்தைகளுக்கு கீழ் உள்ளது.

இருக்கட்டும். 

ஏதோ பெரிதாக காலையில் கார் attend செய்யவும், கோவிலில் உள்ள பிராமணனுக்கு தானம் கொடுக்கும் வேலை இருப்பதாக...இன்று காலை கணபதி கோவில் நடையை செய்யவில்லை.

செய்திருக்கலாம். செய்யவில்லை. கணபதியே நமஸ்காரம்.

காரு ஓக்கே தான். இருந்தாலும் பெண்டாட்டிக்கு காரேஜ் காரன் இன்னும் சிறப்பாக பண்ணிக்கொடுப்பான் என்ற ஆசை. பார்ப்போம் நாளை. காரை காரேஜில் விடும் பணி நாளைக்கும் தொக்கி நிற்கிறது. பெண்டாட்டி திருப்தி ஆகட்டும். இது போதும் என்ற திருப்தி நமக்கு மாத்திரம் இருக்கட்டும்.

பெண்டாட்டி சொல்லை கொஞ்சம் பார்த்து பார்த்து கேட்டால் நாம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

கோதண்டராமர் தரிசனம் சிறப்பாக இருந்தது.

நமஸ்காரம் கணபதி, மாலை எனது வேண்டுதல் நடையை நடந்து விடலாமென்ரிருக்கிரேன்.

பார்ப்போம்.



கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்