02 அக்டோபர், 2021

 இதென்னடா கணபதி?

இதென்னடா கணபதி?

காலை 6:30 வாக்கில், walk போகலாம் - அப்ப வரும் எண்ணங்களை டயரிக் குறிப்பாக வடிக்கலாம் என்ற கனவுடன் இருந்தவனை - வேறு விதமாக அரற்றல் குறிப்பை எழுத வைத்து விட்டாயே !

அலாரம் அடித்தது 5:45 மணிக்கு.

சரி தூங்கும் இன்பத்தை இன்பமாக அனுபவித்து விட்டேன்.

எப்ப நடப்பது? எப்ப என் சிறு சிறு வேண்டுதல்களை உன்னிடம் வேண்டுவது?

கணபதியே சொல் சொல்.

சரி போகட்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம்.

இன்று சனிக்கிழமை.

நேற்று நான் செய்த தப்பிதங்கள் மனதை வியாபிக்கிறது.

குற்றம் ஒன்று என்னவேன்றால் - லேட்டாக எழுந்துகொள்வது.

மற்றோன்று மனைவியை சரிவர புரிந்திருந்த போதிலும், அவளை நோக்கி காட்டுகத்தல் கத்தியது.

கடைசியில் நான் கத்தியதுதான் மிச்சம். நான் கத்தியது பிசகு.

சரி கணபதி.

தற்போதைய வேண்டுதல்களை சொல்கிறேன் கேள்:

1. காலையில் சீக்கிரம் எழுந்து walking போக வேண்டும்.

2. பெண்டாட்டியிடம் கத்தக் கூடாது.

3. இந்த என்னுடைய பயல் இன்னும் சுறு சுறுப்பாக, உற்சாகமாக மற்றும் தலை கனம் உள்ளாதவனாகவும் இருக்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்