26 அக்டோபர், 2018

தமோவோ தமோ.

காலையிலிருந்து மூன்று குணங்களை, மனம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
காலையில் எழுந்தால் தமோவோ தமோ.
பரவாயில்லை, தமோவை தமோ என்று ஒப்புக் கொள்ளும் ‘சத்துவ’ குணம் 
எட்டிப் பார்க்கிறது.
‘அட இன்னும் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்திருக்கிலாமாயிருந்தது’
‘என்ன ஒரு ஒத்துழையாமை, உடம்பும் மனமும். இன்னும் படுத்து விடலாமா?’
தமோ தமோ தமோ.
பால் வாங்கி வந்து, ரேடியோ  விவித்பாரதியில் திரிவேணி பாடல்கள் கேட்டு.
காப்பிக்கு டிகாஷன் போட்டு, அம்மா பெண்டாட்டியின் புடவைகளை 
தோய்க்க ‘தமோ’ பட்டு, தமோவாக குளித்து, 
தமோவாக, விஷ்ணு ஸஹஸ்ரநாம சொல்லி, 
நேற்று உபன்யாசத்தில் கேட்ட ‘வசு’ நாமாவை, எனது புத்தகக்கத்தில் கண்டு பிடித்து…….
அம்மாவுக்கு காபி கொடுத்து…..
ஹே….தமோ குணம் போய், ரஜோ குணம் வந்து விட்டதா?
ஆபிசில் போய் கிளுட்டலாம்...புது செக்ஷன் கம்ப்யூட்டரில் எழுதலாம்….
நேற்று எழுதிய ஆப்பிஸ் பரீட்சை ..நினைத்து நினைத்து பெருமை படலாம்…..
ப்ரமோஷன் வந்த மாதிரி பெருமை பட்டுக் கொள்ளலாம்.

கடவுளின் அருள்