20 ஜூன், 2008

களைகளைப் பற்றி மேலும் .....



களைகளைப் பற்றி மேலும் .....
கருவாச்சி களைகளைப் பற்றி இவ்வாறு நினைக்கிறாள்:
"அம்மா நல்ல விதைகளைத்தான் விதைத்தாள். களைகள் எங்கிருந்து முளைத்தன? களைக்கு விதை எங்கிருந்தது?
உலக வாழ்க்கையும், நிலப் பயிரும் ஒன்று. இங்கு உலகத்தில் நாம் நல்லது விதைக்கிறோம். கெட்டதான முளைகளும் அதுவாக முளைக்கின்றது.
தானியங்களை விதைக்கின்றவன் , தானியங்களுடன் முளைகளையும் அறுவடை செய்து கொள்கிறான்.
தானியத்தை விதைத்து தானியத்தை பெறுவது புத்தி .
விதைக்காமலே களைகள் கிடைப்பது விதி.
களைகளை களைந்து பயிரை பெறுவதைப்போல், விதியை மதியால் களைய வேண்டும்.
பார்க்கலாம்.
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
தோற்றால் அனுபவம்.
மோதி பார்த்து விடலாம்"
காவியத்தில் கருவாச்சியின் மோதல்கள் இன்றும் கண் முன்னே நிற்கின்றது.
அடுத்த பதிவில் சின்னதாக, 'சின்ன சின்ன ஆசை' பற்றி எழுத ஆசை!

கடவுளின் அருள்