16 அக்டோபர், 2021

மழை

மழை சொறீனென்று பெய்து கொண்டிருக்கிறது.

மகன் டூ வீலரில் எப்படி வருவான் என்று மனம் கவலை கொள்கிறது.


கவலை கொண்டிருந்தால் கவலை பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி சந்தர்பங்களில் என்ன செய்யலாம்?


1.எங்கேயாவது நின்று விட்டு வரவேண்டும்.

2.மழையில் நனைந்து கொண்டு வரவேண்டும்.





நானாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன். அவனும் அதைத்தான் செய்வான். இதிலென்ன கவலை?

நேற்று அங்கே, நைஸ் ரோடிலே வரும்பொழுது, ரோட்டின் மேலே போகும் இன்னொரு மேல் ரோட் மேம்பாலத்தை கூரையாக கொண்டு, ஒரு தேனீ கூண்டைப் போல அடிவாரத்தில்குமைந்து கிடந்த டூ வீலர் கும்பலை பார்த்தாயே.

டூ வீலரில் ஆங்காங்கே ஓடாடும் பல மக்களைப் போலல்லவா என் மகனும். 

எப்படியோ வந்து விடுவான்.

கவலைப் படு. கவலை மேலிருந்து எழு. என்ன ஓக்கேயா?

படவாப் பய மடிவாளா வரை மழையில் மானேஜ் செய்து, பிறகு என் நண்பன் வீட்டில் தங்கி வருகிறேன் என்று சொல்லி காலையில் வந்தான்.


கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்