10 செப்டம்பர், 2018

நிதானமாக எழுதுவோம்.

நூறு வார்த்தைகள் எழுதும் அனுபவத்தை ஒரே மூச்சில் அனுபவிக்க வேண்டுமா?
தேவையில்லை.
வெள்ளிக்கிழமை மதியம் இதை எழுத தொடங்கி,
திங்கட்கிழமை நிதானமாக முடித்துக் கொண்டு blog ல போஸ்ட் பண்ணிக்கலாம்.
திங்கள் இல்லையா? செவ்வாய் பண்ணிக்கலாம்.
‘அம்மா’ பற்றிய சொற்களையும், ‘எழுத்து என்ன சொல்கிறது?’
என்பதை பற்றியும் புனைந்த வார்த்தைகளை  இது மாதிரித் தான் செய்தேன்.

இரண்டு நாட்கள் எழுதும் சந்தோஷத்தை அனுபவித்தேன்.
வார்த்தைகளை மாற்றினேன். யோசித்தேன். நிதானமாக எழுதினேன்.
எழுதுவதை விரும்பினேன்.
இந்த குறிப்பிற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறேன்.
எழுதிய வார்த்தைகளை blog ல் போடும் முன் திரும்ப படித்து,
சந்தோஷத்தை அனுபவித்துக் கொள்கிறேன்.

கல்கி கொச்லின்’ பற்றிய எழுத்துக்களை எழுதும் பொழுது அவர் நடித்த
திரைப் படங்கள் பார்க்க வேண்டுமென்றிருந்தேன்.
இரண்டு படங்களை watch list ல போட்டு வைத்துள்ளேன்.
‘Ribbon’ மற்றும் ‘Waiting’
Hot Star  app ல கிடைத்துள்ளது.
காத்திருக்கிறேன்...படங்களை பார்க்க, எழுத…..


கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்