26 செப்டம்பர், 2018

கருத்துப்படிவம் - எண்ணம் - மனஉரு.

கருத்துப்படிவம்
எண்ணம்
மனஉரு.
ஒரு கருத்தை கேட்கிறேன்.
புரிகிறது.
மனம் கருத்தை ஒரு மாதிரி புரிந்து கொள்கிறது.
அதை உங்களிடம் எழுத்து மூலமாக புரிய வைக்க முடியமா?
நான் எழுதியது,  நான் புரிந்து கொண்ட கருத்தை அப்படியே சொல்லுமா?
சந்தேகம்தான்.
நான் புரிந்து கொண்ட கருத்து, அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டுள்ளதா?
சந்தேகம்தான்!
இப்பொழுது என்ன சொல்ல விழைகிறேன்?
மனம் நான் உணர்ந்ததை சொல்ல விரும்பிகிறது.
சொற்ப எண்ணங்களுக்கு வார்த்தைகள் வருகிறது.
அந்த வார்த்தைகள் என் மன உருவை ப்ரதிபலிக்கிறதா?
தெரியவில்லை.
இருக்கட்டும்.
90 எண்ணங்களுக்கு/கருத்துக்களுக்கு ஒரு 9 வார்த்தைகள் கிடைக்கிறதா?
நல்லது.
கவலைப் பட வேண்டாம்.
81 எண்ணங்களை சொல்ல முடியவில்லையே என்று வருந்துதல் வேண்டாம்.
9 கருத்துக்கள் கிடைத்தனவே!
9 புரிதல்களை வைத்து செயல் படு. சொல்லு. எழுது.
எல்லா புரிதல்களையும் புரிய வைப்பது கடினமன்றோ!
இது ஒரு கருத்துப்படிவம்.












  



கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்