06 செப்டம்பர், 2018

மனதின் வார்த்தைகள் வேண்டும்


கடந்த குறிப்பில், ‘எழுத்து’ என்ன சொல்கிறது என்று சொல்லுகையில்
ஒரு படத்தை போட்டு சொன்னேன். கூகிள் கீப்பில்,
நான் படித்த ‘’வாழ்க்கை’ மற்றும் ‘கலை’ பற்றிய ஒரு மேற்கோளை வைத்திருந்து,
அதை படம் பிடித்துக் கொண்டு,  
குறிப்பில் நுழைத்து, படித்துக் கொண்டே ஆங்கிலத்தை தமிழ் படுத்தினேன்.
அப்படி செய்தது எனக்கு பிடித்திருந்தது.


இந்தக் குறிப்பிலே நான் என் அம்மாவைக் குறித்து 2016ல் 100 words.com
எழுதியிருந்த ஒரு குறிப்பை படமாகப் போட்டு,
சில வார்த்தைகளை எழுத விரும்புகிறேன்.


‘மொழி’ திரைப் படத்திலே ஜோதிகா ஊமை மற்றும்
காது கேளாதவராய் நடித்திருந்தார்.


அம்மாவுக்கு காது கேட்கவில்லையே என்னும் ஏக்கம், என் தலையாய ஏக்கம்.


படத்தின் ஹீரோ, காதலிக்கு காது கேட்கவில்லை என்றாலும் விரும்புகிறார்.


இந்த திரைப் படம் பார்த்தபின் என் ஏக்கம் குறைந்தது.


அன்பு செலுத்த என் பேச்சு அம்மாவுக்கு  கேட்க வேண்டும் என்பது,
அவசியமே இல்லை.

மனதின் வார்த்தைகள் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்