28 ஏப்ரல், 2019

இது ஐந்தாவது போஸ்ட்.

இது ஐந்தாவது போஸ்ட்.  எதோ அச்சுப் பிச்சு எழுதுவதென்றாலும்,
இதற்காகவே  கொஞ்சம் Time எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
நச்சு பிச்சு என்று வேலைகள் இருந்து விட்டால்  
ஒரே மூச்சில் ஒன்றும் எழுத முடிவதில்லை.


என்ன சொல்ல விழைகிறேன் என்று எனக்கே தெரிவதில்லை.
இந்த கணினி உபயோகித்து எழுதும் குறிப்புக்களில் இது ஐந்தாவது.
அடுத்த வாரம் இரண்டு நாட்கள்.
இன்னொரு குறிப்பு எழுதி விடலாமென்ற நம்பிக்கையுள்ளது.
அப்புறம் இந்த கணினி, இந்த செக்ஷன் பந்த்.


வெள்ளிக்கிழமை இதை எழுதுகிறேன்.
இன்று பிசி. எனது ஆபிஸ் மக்களுக்கு சாப்பாடு போடுகிறேன்.
20 மக்களை வேறு ஆபிசுகளிலிருந்து அழைத்திருக்கிறேன்.
ஒரு 80 மக்கள் என்பது கணக்கு. பணம்  எவ்வளவு ஆகும்?


கொஞ்சம் anxiety!



சென்ற குறிப்பில்  சொன்ன ஜியோ பில் பாஸானது.  
மனம் மனதை மெச்சியது.
இப்போதைய ஆதுரம் , விருந்து மற்றும் சோலார் பில்கள்.
அடுத்த குறிப்பு எழுதும் பொழுது இதை பற்றி சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்