26 ஆகஸ்ட், 2018

சிறி

தொடங்கி விடப்பா இன்றைய விடுமுறையை கொண்டாட.
கொண்டாட்டம் என்பது எனக்கு எழுதுவது.
மனதில் தோன்றுவதை எழுதுவது.
இன்றைய கொண்டாட்டம், 'ரக்‌ஷா பந்தன்'

'சிறி' கிட்ட சொல்லி காலம்பற ஐந்து மணிக்கு எழுந்து நூறு வார்த்தைகள் எழுதிவிடலாம் என்று இன்றைய எழுதும் ப்ராஜக்டை நிர்ணயித்திருந்தேன்.
எழுந்திருக்கவில்லை.
என்றாவது ஒரு நாள் காலையில் முதல் வேலையாக எழுத தொடங்குவேன். தற்போதைக்கு அடுத்த விடுமுறை நாளுக்கு இதை குறியாக வைத்துக் கொள்கிறேன்.

எழுத தொடங்கும் பொழுது மணி 11:30.
நன்று.

தங்கை ராக்கி அனுப்பியிருந்தாள்.
உள்ளூர சந்தோஷம்.
ஆன் லைனில் ஆர்டர் செய்து, குரியர் மூலம் வந்தடைந்த ராக்கிக் கயிறு, குங்குமம், அரிசி, சின்ன ட்ரே, இரண்டு பட்டில்கள், சாக்கலேட் எல்லாவற்றையும் அன்புடன் உபயோகப் படுத்தும் நாள்.

கையில் ராக்கி கட்டிக் கொள்ளும் நாள்.

சந்தோஷமாக கட்டிக் கொண்டேன்.

ரக்ஷா பந்தன்.

பாக்கியவான். எனக்கு இரண்டு தங்கைகள்.
தங்கைகளுக்கு நல்லவைகள் நடக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.



--
Sent from Gmail Mobile

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்