22 மே, 2009

அம்மா, பெண்டாட்டி


என் அம்மாவுக்கு ஏதாவது அன்பாக செய்தால் பெண்டாட்டிக்கு ஏன் சார் கோபம் வருது?
சார் அதனால நீங்கள் மனதை தளர விடாதீங்க. மனைவியிடம் நீங்கள் ரொம்ப 'தாய் பாசக்காரர்' என்று நிரூபிக்கத் தேவையில்லை. அப்புறம் ஒரு நாள் (உங்களுக்கு மகனிருந்தால்) உங்கள் மனைவியின் மருமகள் அவங்களை சரியாக கவனித்துக் கொள்வாள்.
வீரமாக மனைவியை திட்டாதீங்க. மிக மிக அமைதியாக பழி வாங்குங்க உங்கள் மனைவியை! அம்மாவுக்கு இன்னும் இரட்டிப்பாக நல்லது செய்யுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயமுங்க: அவங்க மாமியாருக்கு நல்லது செய்யும்பொழுது அவங்களுக்கு எரிச்சல் வரவில்லை என்றால்தான் - மனைவிக்கு எதோ கோளாறு என்று அர்த்தம்.
ஏன் பிளாக் செய்கிறேன் எதற்கு செய்கிறேன் எப்படி செய்கிறேன் எங்கு செய்கிறேன் இதையெல்லாம் யோசித்து, வரும் எண்ணங்களை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

இந்த ப்ளாகை மேலும் அலங்கரிக்க ஒரு படம் மற்றும் லிங்க் சேர்கிறேன். தலைப்பை கிளிக் செய்தால் அருமையான ஒரு அம்மா கவிதை.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல டெக்னிக். ஆனா நடைமுறைக்கு ஒத்து வரும்மானு தெரியல. ப்லோக் நல்ல இருக்கு. அருமையா வரையுறீங்க.

Dhavappudhalvan சொன்னது…

வித்தியாசமான முயற்சி. நன்றாக இருக்கிறது. முதலில் நீங்கள் சொல்ல நினைப்பதை பதித்து விடுங்கள். பிறகு மற்றவர்களை ( என்னையும் சேர்த்து தான்) அறிமுகம் படுத்துங்கள். அப்பொழுதுதான் உங்கள் படைப்பை முழுமையாக படிக்கக் கூடிய நிலையுண்டாகும். வாழ்த்துக்கள்.

Dhavappudhalvan சொன்னது…

எப்படி கண்ணா உன்னுடைய http://tamilmadscribblings.blogspot.com/ லே " அம்மா பெண்டாட்டி " இந்த தலைப்பை கிளிக் செய்தால் வேறோரு புதிய பிளாக் http://priyatamil.wordpress.com/ திறக்கிறதே? அதை எப்படி செய்தீர்கள்? நானும் பலவகைகளில் முயற்சி செய்து பார்த்து விட்டேன். முடியவில்லை. வித்தியாசமாய் எதாவது செய்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.

கடவுளின் அருள்