23 ஜனவரி, 2009

ஒன்றே குறி

நிலாசாரலில் படித்த ஜென் கதை ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்:

ஒரு கண்டிப்பான பாட்டு வாத்தியாரிடம் பாடல் பாடக் கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். முதல் நாள் கற்ற அதே பாடலே, இரண்டாம் நாள் பாடமாகவும், அதற்கடுத்தடுத்த நாட்களின் பாடமாகவும் அமைந்தது. வேறு எதையுமே அவர் சொல்லித் தரவில்லை. ஒரே பாடலையே திரும்பத் திரும்பப் பாடி எரிச்சலாகி வெறுத்துப் போன இளைஞன் அந்த வாத்தியாரை விட்டு ஒருநாள் ஓடியே போனான்.


தற்செயலாக பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த அந்த மண்டபத்திற்குள் நுழைந்தவனை பாடகன் என நினைத்து அவனையும் போட்டியில் சேர்த்துக் கொள்ள, தனக்குத் தெரிந்த அந்த ஒரு பாடலையே அவன் சிறப்பாகப் பாட, மக்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. முதல் பரிசைத் தட்டிச்சென்ற அவனை மற்ற போட்டியாளர்கள் அழைத்து அவனது குருவைப் பற்றி விசாரித்தனர்.

பின்னாளில் அவனே மிகச்சிறந்த பாட்டு வாத்தியாராக ஆனான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதுதான் வெற்றிக்கான வழி.

ஒன்றைப்
பிடித்துக்கொள்ளுங்கள்...


நன்றாக... மிக நன்றாக.

அடுத்த பதிவு: ஒரு சிறுகதை.

2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

summaa sollakkUdaadhu. nijam nijam dhaan.

Dhavappudhalvan சொன்னது…

summaa sollakkUdaadhu. nijam nijam dhaan.

கடவுளின் அருள்