29 அக்டோபர், 2008

கற்றுக் கொண்டு விட்டேன்


அம்மாவிடம் பேச முடிவதில்லை.
பாவம் அவளுக்கு காது கேட்பதில்லை.
என் விடலை மகனிடம் பேச முடிவதில்லை.
அப்பன் உளறுகிறான்,
'சரி சரி' என்று பேச்சை முடித்து விடுகிறான்.
மனைவியிடம் பேச முடிவதில்லை.
குடும்ப சம்பந்தமாக அவள் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆங்க்!ஐடியா!
என்னிடமே உரக்க பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்.
பதிலளிக்கவும் கற்றுக் கொண்டு விட்டேன்!

அடுத்த கவிதை
இது ஹை கூ?

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...