05 மார்ச், 2008

கள்ளிக்காட்டு இதிகாசம்

2005 ஆம் வருடத்தில் கிறுக்கிய கிறுக்கல்களை நினைவிற்கு கொணர முயற்சி செய்கிறேன்.

கிராமத்தில் அணைக்கட்டு வருவதால் அங்கு மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் பிரும்மாண்டமாய் படைத்திருந்தார் வைரமுத்து.

மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்தை.

கதானாயகனாக வரும் கிழவனையும் அவன் பேரன் மொக்கராசுவையும் இன்னொரு முறை சந்திக்கவேண்டும்.

சீனு காய்ச்சும் சாராயத்தை ருசி பார்க்க வேண்டும்.
பேயத்தேவரிடம் கற்க வாழ்க்கைப் பாடங்கள் நிறைய இருந்தன.
கருவாச்சி காவியம் படித்து எழுதிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. அடுத்த பதிவு அதைப்பற்றிதான்.











08 பிப்ரவரி, 2008

பட்டியல்


== தமிழ்ப் பழமொழிகள் ==
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
(from Wiki quote)விக்கிகோட்டுக்கு.

விக்கி ஞாநி சென்றிருந்தபோது:-

கற்கள் தடைகள் இவைகளை நாம் நீக்கத்தான் செய்ய வேண்டும்.
முடியாதபொழுது ஞாநியின் சொற்கள் ஓ.கே.



விக்கி ஞாநி இணைய விலாசம்:-http://nyani.wikispaces.com/
விக்கியில் பல பல விஷயங்கள் உள்ளன.
விக்கி அகராதி, விக்கி ஸ்பேஸஸ்..........இந்த தடவை ஸ்பேஸஸுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

##################################################################

குமுதத்தில் வரும் கேள்வி பதில் பகுதியை செம்பட நிர்வாகம் செய்கிறார் வைரமுத்து.

விஞ்ஞானமாகட்டும், ஞானமாகட்டும் அல்லது நகைச்சுவையாகட்டும் அவருடைய நிர்வாகம் திறம்பட செயல் படுகிறது.

அதுவும் அவரின் பட்டியல் பதில்கள் மிகவும் சுவையானது.
ஒரு பதிலில் அவர் தமிழ் கதாநாயகர்களுக்கு எழுதிய, அவருக்கு விருப்பமான பாடல்களை பட்டியல்யிடுகிறார்.

அதில் எனக்குப் பிடித்தமான, ஞாபகமுள்ள வரிகளை பட்டியலிடுகிறேன்:

எம்.ஜி.ஆர். - கலைஞருடன் இருந்த நட்பால் எம்.ஜி.ஆரிடம் அதிகம் பழகவில்லை என்று குறிப்பிடும் வைரமுத்து அஞ்சலிப்பாடலாக 'சந்தனப் பேழையிலே' என்ற பாடலை தனக்குப் பிடித்ததாக பட்டியலிடுகிறார்.
சிவாஜி - முதல் மரியாதை படத்தில் வரும் 'பூங்காற்றே திரும்புமா' பாடலை பட்டியலில் தேர்வு செய்திருந்தார்.
கமல்ஹாசன் - "அந்தி மழை பொழிகிறது..." (ராஜபார்வை)
ரஜினிகாந்த். - "ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்" (படிக்காதவன்)
சிவக்குமார் - "கலைவணியே....." (சிந்து பைரவி)
பாக்கியராஜ் - "எண்ணிய எண்ணங்கள் ஈடேற...." (அந்த ஏழு நாட்கள்)

பட்டியல் போடுவது - இன்ப பட்டியலோ, துன்ப பட்டியலோ, சாதித்த பட்டியலோ, சாதிக்க இயலாமல் போனவைகளோ, முயற்சிகளோ, நம்மிடம் உள்ள நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ - ஒரு சாதனைதான்.

நிதானமாக பட்டியல் போட்டு நிதானமாக அவைகளை அசை போடுவது ஒரு மஜா.
ஓரிடத்தில் அவைகளை அவ்வப்போது பட்டியல் போட முயற்சித்து சில பட்டியல்கள் உள்ளன. அவைகளில் ஒன்றுதான் மனைவி எனக்கு கட்டிக்கொடுத்த சாப்பாடுகளின் பட்டியல்.

இங்கு 'சும்மா' அதை போட்டிருக்கிறேன்.
List of lunch office carried to office.
1. Idly
2. Lemon rice.
3. Coconut rice.
4. Radish sambar rice. Beans curry.
5. Thiruvathirai kali, kootu.
6. Besi bele bath appalam.
7. Vangibath - cut cucumber.

வாழ்க பெண்டாட்டி!


சிவாஜி படத்தில் வரும் இந்த வைரமுத்து வரிகள்:
"ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது......நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது"அருமையான வரிகள்.

இப்பொழுது காதல் கீதல் சந்தர்பத்திற்கு இந்த வரிகள் எனக்கு உபயோகப்படாது.

வரிகளை இப்படி பயன் படுத்திக்கொள்கிறேன்.

"மூன்றாண்டுகளாக சேமித்த காசிது.....
மூன்று நிமிஷங்கள் தாண்டியும் வாழ்ந்தால் அதிசியமிது....."


"மூன்று வாரங்களாக சேமித்த எண்ணமிது....
மூன்று நாட்களில் எழுத இழுக்குது....."

அடுத்தது வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் ஆகிய புதினங்களிலிருந்து நான் சேமித்த எண்ணங்களை எவ்வளவு தூரம் எழுத்தில் கொணர்கிறேன் என்பதை முயற்சி செய்யப்போகிறேன்!!

08 ஜனவரி, 2008

ஞானி சிறுகதைகள்

தேனீயில் ஞானி கதைகள் சுவாரஸ்யமாய் உள்ளது.
சாம்பிளுக்கு இங்கு ஒரு கதை கொடுக்கிறேன்.
மேலும் தேனீயில் படிக்கலாம்.
அல்லது ஞானி கதைகளை ஞானி என்கிற வலை தளத்தில் படிக்கலாம்.
இதன் ஆசிரியர் மோகன் கிருட்டிணமூர்த்தி.
சிறுகதைகள் சிறுசாக, ஒரு சாதரண குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை களமாகக் கொண்டு அற்புதமான யதார்த்தத்தை கொடுக்கிறது.

நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

நீங்களாவது ஞானியாகறதாவது என்று நக்கலாக சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தாள்.

எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன். வாங்க, வாங்க உட்காருங்க.

எங்க வீட்ல டிவி மக்கர் பண்ணுது. சட்டி ஒலி பாக்கனும் என்றார் அந்த பெண்மணி.

அதுக்கு என்ன. உட்காருங்க என்று சொல்லி தொலைகாட்சி துவக்கிவிட்டு சமையலறைக்குள் விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

என்ன சார் இல்லையா வீட்ல என்றேன்.

அவரா. டை அடிச்சிட்டு வர போயிருக்காரு. நாளைக்கு ஏதோ பெரிய மீட்டிங்கா.

அட டை அடிப்பாரா அவர்? அடப்பாவி மனிதா உன் முடியை பார்த்து இத்தனை வயதிலும் என்ன இளமை என்றெல்லவா நினைத்திருந்தேன் என்று மனதுக்குள் திட்டினேன்.

பின்னே. நாப்பது வயசில் நரைக்காம இருக்குமா? உங்களுக்கு எத்தனை வயது? என்றார் என்னிடம் சட்டென்று.

வரக்கூடாத கேள்வி என்று நினைக்கும் போதே வந்த கேள்வி. முப்பதததததததைந்து என்றேன். உள்ளே இருந்து என் மனைவி………..தெட்டு என்று முடித்தாள்.

ஹிஹி எட்டு என்று முடித்தேன்.

புயலை கிளப்பிவிட்டு தொடர் முடிந்ததும் வீடு திரும்பினார் அந்த பெண்மணி.

கையில் சப்பாத்தி கட்டையுடன் என் மனைவி பத்திரகாளியாக வெளியே வந்தாள். 38ஐ 35ன்னு சொல்றீங்க, தம் கட்டி வயித்தை இழுத்து பிடிச்சி வச்சிருக்கீங்க, தண்ணி எடுத்திட்டு வர துள்ளி ஓடி வர்றீங்க. இதுல ஞானி ஆவப்போரிங்களா. உங்களை விட 2 வயது பெரியவர் அவரே டை அடிச்சிக்கிறார்ல. போய் டை அடிச்சிட்டு வாங்க என்றாள் காட்டமாக.

பூனை மாதிரி உள்ளே சென்று சட்டை போட்டுக் கொண்டு முடி திருத்தும் நிலையத்திற்கு கிளம்பினேன்.

எதிர்பட்டான் ஞானி. நடந்ததை சொன்னேன்.

ஹாஹா வென்று சிரித்தான்.

நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம் என்று சொல்லி பறந்தான்.

அவன் போன திசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஞானி

ஞானி - சிறுகதை தொகுப்பு
இதன் ஆசிரியர் விக்கி ஞானி என்கிற தளத்தில் விவாதத்திற்கும் அவகாசமளிக்கிறார்.
அங்கு சென்று பார்க்க ஆசை.
விரைவில் நிறைவேற்றிகொள்கிறேன்.
இந்த பதிவினுடன் வைரமுத்து வரிகள்:

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

{படம் ஜெண்டில்மேன்}



தேனீயுடன் இந்தப்பதிவு முடிகிறது.
அடுத்த பதிவிற்கு விக்கி செல்கிறேன்.


--
http://madscribbler.googlepages.com/

21 டிசம்பர், 2007

தேனீ தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.

புதுசு.


google indictransliteration.


இதில் நான் தமிழில் ஜாலியாக எழுதலாம்.


தேனீ, தேன்கூடு விக்கி சென்றிருந்தேன்.


தேடல் வார்த்தை: வைரமுத்து.


wiki.


http://ta.wikipedia.org/wiki/வைரமுத்து


வாழ்க்கைக் குறிப்பு: வைரமுத்து.

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.



இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.


தேனீ


இந்த பாடல் வரி படித்தது:


தாஜ் மஹால் படத்திலிருந்து,


திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடாசிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடாஎட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடாஎட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா.


நான் இடுக்கைகள் எழுத அரிவாள தீட்டிகிட்டு வருகிறேன்.

தேன்கூடூ

இங்கு வைரமுத்துவை தேடப் போய் இட்டலி வடை வலையில் விழுந்தேன்.


கடிகார முட்கள் போல்... வைரமுத்து கவித்துவமான பேச்சு
மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் ஒரு கடிகாரம் போன்றது. கடிகாரம் இயங்க 2 முட்கள் தேவை. சின்ன முள்ளும், பெரிய முள்ளும் தேவை. இரண்டு முள்ளும் இல்லாவிட்டால் காலத்தை காட்ட முடியாது. சின்ன முள் நிதானமானது, நேரம் காட்டும். பெரிய முள் சுறுசுறுப்பானது, வேகமாக ஓடும். எனவே சின்ன முள்ளும், பெரிய முள்ளும் கடிகாரத்திற்கு தேவை.
திராவிட இயக்கத்தின் மீது ஆசை உள்ளவன் என்ற முறையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடிகாரத்தின் முட்களைப் போல் நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அண்ணாவின் வாழ்த்தை பெற்றவர் கலைஞர். தளபதி மு.க. ஸ்டாலினுக்கு கலைஞரின் வாழ்த்து இருக்கிறது. அவருக்கு அண்ணாவின் வாழ்த்தும் இருந்தால் அவர் பெறும் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறித்துக் கொள்ள வேண்டிய வெற்றியாக இருக்கும்.

மேலும் படியுங்கள்.

மற்றொரு சுறு சுறு வலை பக்கத்தையும் பார்த்தேன்.

அது "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்"

தேன்கூட்டி்ற்குச் சென்றால் எதை படிப்பது என்ற குழப்பம் நிறையவே!

ஜெஸிலாவின் கிறுக்கல்கள் தூபாயிலிருந்து கிறுக்கப்படுகிறது.

நான் எங்கிருந்து அதை படிக்கிறேன் என்பதை காண்பிக்கிறது.

புது இடுக்கை பதிவு ஆனால் எனக்கு இ மெயில் மூலமாக தெரியும்.


எழுத்து சுறு சுறுப்பாக உள்ளது.


எனது அடுத்த பதிவு அடுத்த வருடம்.

எனது தேடல் வைரமுத்து தான்.

கூட கொஞ்சம் வலை தளங்கள்.





--
http://madscribbler.googlepages.com/

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...