கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மார்ச், 2009

சந்தோஷம் 2







Fly over ஏறும்பொழுது ஒரு கவனம்.



இறங்கும்பொழுது ஒரு கவனம்.



கூட வரும் வண்டிகளை பார்த்து,



எனது வண்டியை திருப்பும்பொழுது ஒரு கவனம்.






கவனங்களில் வெற்றி கண்டு,



நேர் ரோடில் ஹாயாக வண்டியைசெலுதும்பொழுது ஒரு சந்தோஷம்!






நீண்ட நாட்களாக ஆனந்த விகடனில் வரும் "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதியில் வருவது மாதிரி கேள்வி பதில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பதிவில் சந்தோஷமாக எழுதுகிறேனே!!

06 மார்ச், 2009

வேங்கடவன்.


பல இடங்களில் முட்டியை வலிக்கச் செய்யும் படிகள்.
சில இடங்களில் இதயத்தை சாதரணமாக இயங்க வைக்கும்,நடைபாதைகள்.
எதற்கும் நமது முறைக்கு காத்திருக்க வேண்டும் -என்பதை உணர்த்தும் பலவகையான மனிதர்கள் வரிசை.
நமது முறை கண்டிப்பாக வரும் என்று தெரிந்திருந்தும்,மற்றவனை/மற்றவளை முந்த வைக்கும் மனது!இவையனைதும் செய்தால்,மனித தெய்வங்களுடன் சேர்ந்து,
ஒரு நிமிடம்வேங்கடவனை பார்க்கும் சந்தோஷம்.

அடுத்த பதிவையும் தயாராக இருக்கும் கவிதை கொண்டு ஒப்பேற்றி விடுகிறேன்.

01 டிசம்பர், 2008

இரத்தம்.


வாடிக்கையாளர் மீது உட்கார்ந்த,
கொசுவை விசிறி அன்புடன் துரத்திவிட்டான்,

வட்டிக்கடைக்காரன்.


அடுத்த கவிதை.

தேடல்

19 செப்டம்பர், 2008

இன்பமான அவஸ்தை




இந்தப் பதிவில்


முதலில் நண்பர் எழுதிய கவிதையை ரசித்தேன்.

குப்பை


சேர்த்து விட்டேன்
குப்பையாய்
காகிதங்களை.

எழுதவோ
மறந்து விட்டேன்
கவிதைகளை.

வீசி விட
மனமோ
துணியவில்லை.

கவிதைகளைவடித்திட,
எண்ணங்களோ
தோன்றவில்லை.

-தவப்புதல்வன்.


இப்பொழுது Compose Tamil இணையகத்தில் முன்பு நான் எழுதிய கவிதை:


இன்பமான அவஸ்த்தை!
- balu g.
வலிப்பு மாதிரி வெட்டி வெட்டி வரும் எண்ணங்கள்.


எண்ணங்களை ஒரு வழியாக போக வைப்பது அவஸ்த்தை!


ஒரு வழியாக போகும் எண்ணங்களை கிறுக்கி வைப்பது அவஸ்த்தை!


கிறுக்கலை எழுத்தாக்கவோ, செயலாக்கவோ செய்யும் முயற்சி -


அவஸ்த்தை.இன்பமான அவஸ்த்தை!!


அடுத்த கவிதை
கற்றுக் கொண்டு விட்டேன்!!!
தொடுப்புக்களில் தமிழ் நெஞ்சங்கள்


12 செப்டம்பர், 2008

திருமணம்.


நடிகையை சாகடித்து விட்டார்கள்.
மெகா சீரியலில்!
நடிகைக்கு திருமணமாம்.




அடுத்த கவிதை:

இன்பமான அவஸ்த்தை!

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...