எப்படி ப்ளாக் செய்கிறேன்?
இப்படி க்ளிக்கி, அப்படி க்ளிக்கி, அந்த formக்குப் போய், இந்த formக்குபோய்....கடலென இருக்கும் Optionகளில் (optionக்கு தமிழில் என்ன?) ஒருசெட்டிங்கை தேர்ந்தெடுத்து கிறுக்கல்கள் என்று முதலில் பெயர் வைத்து,பிறகு சந்தோஷமாக எழுதுகிறேன் என்று பெயர் வைத்து கிட்டத்தட்ட 53 பதிவுகளைஇந்த ப்ளாகில் எழுதியிருக்கிறேன்.
ஓடும் ஆயிரமாயிரம் எண்ணங்களிலிருந்து....,
ஓடாமல் இருக்கும் எண்ணங்களை ஓடவைத்து ஒரு தலைப்பை தேடிக்கொள்கிறேன்.
அந்த பொருளுக்கேற்ப ஆங்காங்கு கிறுக்கி வைத்துக் கொள்கிறேன்.
கூகிள் நோட்பாட், இ மெயில் ப்ரோக்ராம்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். கூகிள்டாக்குமெண்டில் கூட பதிவுகளை வரைவு செய்து கொள்கிறேன்.
பதிவில் ஒரு படம் போட விருப்பமிருந்தால் அதற்கு ஒரு கூகிள் தேடல்.
பல சமயங்களில் ஒரு பதிவை செய்வதற்கு மாதக்கணக்காகிறது.
சில சமயங்களில் உடனேசெய்ய முடிகிறது.
மெனக்கிட்டு பதிவு செய்யும் சில பதிவுகளை படிக்க எனக்கேபிடிப்பதில்லை.
இப்படி ப்ளாக் செய்கிறேன்.
அடுத்த கேள்வி: கூகிள் டாக் என்றால் என்ன?
20 செப்டம்பர், 2009
16 ஜூலை, 2009
நான் என் BLOG செய்கிறேன்?
நான் ஏன் பிளாக் செய்கிறேன்?
கேள்வி கேட்டுக் கொண்டு விட்டேன். பதில் எழுத திண்டாடுகிறேன்.
BLOG செய்வது, யாரவது படிக்க மாட்டார்களா என்று தானே?
என்னுடைய எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், அதில்லென்ன தயக்கம்?
எண்ணங்களை அப்படியே எழுத முடியாது. ஒரு பொருள், தலைப்பு வேண்டியள்ளது. கட் கட்டாக வரும் எண்ணங்களை கட்டு கட்டாக கட்டி ஒரு வடிவு கொடுக்க வேண்டும். எண்ணங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.
நம் எண்ணங்களை எல்லாம் கொட்டி விட முடியுமா என்ன?
எண்ணங்களை எல்லாம் எழுதினால் எல்லோரும் படித்து விடுவார்களா என்ன? எல்லோருக்கும் வேறு உருப்படியான வேலைகள் இல்லையா!
நான் மற்றவர்கள் எழுத்தில் வடித்திருக்கும் எண்ணங்களை படித்து விடுகிறேனா என்ன?
மற்றவர்கள் என் BLOG கைப் படித்து என் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை. படித்து, அவர்களுடைய எண்ணங்களை கருத்தாகச் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். அதனால் BLOG செய்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவான செய்திகளை எழுதினால் கொஞ்சம் நிறைய மக்கள் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
BLOG செய்வது, யாரவது படிக்க மாட்டார்களா என்று தானே?
என்னுடைய எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், அதில்லென்ன தயக்கம்?
எண்ணங்களை அப்படியே எழுத முடியாது. ஒரு பொருள், தலைப்பு வேண்டியள்ளது. கட் கட்டாக வரும் எண்ணங்களை கட்டு கட்டாக கட்டி ஒரு வடிவு கொடுக்க வேண்டும். எண்ணங்களை கோர்வைப் படுத்த வேண்டும்.
நம் எண்ணங்களை எல்லாம் கொட்டி விட முடியுமா என்ன?
எண்ணங்களை எல்லாம் எழுதினால் எல்லோரும் படித்து விடுவார்களா என்ன? எல்லோருக்கும் வேறு உருப்படியான வேலைகள் இல்லையா!
நான் மற்றவர்கள் எழுத்தில் வடித்திருக்கும் எண்ணங்களை படித்து விடுகிறேனா என்ன?
மற்றவர்கள் என் BLOG கைப் படித்து என் எண்ணங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை. படித்து, அவர்களுடைய எண்ணங்களை கருத்தாகச் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். அதனால் BLOG செய்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவான செய்திகளை எழுதினால் கொஞ்சம் நிறைய மக்கள் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு நண்பர் word press வலை தளத்தில் நல்லதொரு பதிவு செய்கிறார். வரைட்டியான விஷயங்களை படங்களுடன் நன்றாக பகிர்ந்து கொள்கிறார். இந்த பிளாக் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஓரிரு முறை எனது கருத்துக்களை அந்த பிளாக்கில் எழுதியுள்ளேன்.அந்த நண்பர் என் பிளாக் பக்கமே வரவில்லை. இதோ எனக்குப் பிடித்த அந்த பிளாக் விலாசம்:
மற்றொரு சென்னை நண்பர் இருக்கிறார். இவரை நான் வலை மூலம் சந்தித்து, ஒரு சந்தர்பத்தில், அவர் மற்றும் அவர் குடும்பத்தினரை பர்சனலாகவும் சந்தித்திருக்கிறேன்.(பர்சனல்லாக என்பதை எப்படி தமிழ் படுத்துவது? )சார் சும்மா கவிதை எழுதி கலாய்கிறார். படியுங்களேன் அவர் கவிதைகளை: ஆம்பல் மலர்.
பொறுமையாக அவரின் ஆத்ம சரிதத்தையும் பதிக்கிறார். அவ்வப்பொழுது உரிமையாக நான் ஏன் அடிக்கடி பிளாக் செய்வதில்லை என்றும் கேட்கிறார்.
மற்றொரு நல்ல பிளாக் ஞாநி. இதைப் பற்றி இந்த பிளாக்கில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். அதற்கான லிங்க்.ஞானி என்ற பாத்திரம் மூலம் இவர் நல்ல கருத்துக்களை சொல்கிறார். இவர் என் பிளாகிற்கு வந்து அவரின் ஞானியை சந்தித்ததற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
வலை தளங்களில் எவ்வளவோ வலைப்பூக்கள் இருந்தாலும், சில பூக்கள் மாத்திரம் மனதில் தங்குகிறது. நமது பக்கங்கள் என்ன - ஜுஜுபி.
ஆக,
BLOGGER
WORDPRESS
WEBDUNIYA
என்ற மூன்று தளங்களில் என்னுடைய எண்ணங்களை (பெரும்பாலும் ஆபீஸ் மற்றும் குடும்பம் சம்பந்தமான எண்ணங்கள்) எழுதிக்கொண்டுள்ளேன்.
மக்கள் வந்து படித்து கருத்துக்கள் சொன்னால் மேலும் சந்தோஷமாக எழுத முயற்சி செய்வேன். வலை தளங்களில் மிதந்து கொண்டிருப்பேன்.
பார்ப்போம்.
ஆக,
BLOGGER
WORDPRESS
WEBDUNIYA
என்ற மூன்று தளங்களில் என்னுடைய எண்ணங்களை (பெரும்பாலும் ஆபீஸ் மற்றும் குடும்பம் சம்பந்தமான எண்ணங்கள்) எழுதிக்கொண்டுள்ளேன்.
மக்கள் வந்து படித்து கருத்துக்கள் சொன்னால் மேலும் சந்தோஷமாக எழுத முயற்சி செய்வேன். வலை தளங்களில் மிதந்து கொண்டிருப்பேன்.
பார்ப்போம்.
இப்படி கேள்வி பதில்களாகவே இந்த பிளாகை சந்தோஷமாக தொடர்வோம். இந்தப் பதிவில் 'எப்படி BLOG செய்கிறேன்' என்பதை விவரிக்கவில்லை. அதை அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்.
--
cgbalu from Hubbali
22 மே, 2009
அம்மா, பெண்டாட்டி

என் அம்மாவுக்கு ஏதாவது அன்பாக செய்தால் பெண்டாட்டிக்கு ஏன் சார் கோபம் வருது?
சார் அதனால நீங்கள் மனதை தளர விடாதீங்க. மனைவியிடம் நீங்கள் ரொம்ப 'தாய் பாசக்காரர்' என்று நிரூபிக்கத் தேவையில்லை. அப்புறம் ஒரு நாள் (உங்களுக்கு மகனிருந்தால்) உங்கள் மனைவியின் மருமகள் அவங்களை சரியாக கவனித்துக் கொள்வாள்.
வீரமாக மனைவியை திட்டாதீங்க. மிக மிக அமைதியாக பழி வாங்குங்க உங்கள் மனைவியை! அம்மாவுக்கு இன்னும் இரட்டிப்பாக நல்லது செய்யுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயமுங்க: அவங்க மாமியாருக்கு நல்லது செய்யும்பொழுது அவங்களுக்கு எரிச்சல் வரவில்லை என்றால்தான் - மனைவிக்கு எதோ கோளாறு என்று அர்த்தம்.
ஏன் பிளாக் செய்கிறேன் எதற்கு செய்கிறேன் எப்படி செய்கிறேன் எங்கு செய்கிறேன் இதையெல்லாம் யோசித்து, வரும் எண்ணங்களை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.
சார் அதனால நீங்கள் மனதை தளர விடாதீங்க. மனைவியிடம் நீங்கள் ரொம்ப 'தாய் பாசக்காரர்' என்று நிரூபிக்கத் தேவையில்லை. அப்புறம் ஒரு நாள் (உங்களுக்கு மகனிருந்தால்) உங்கள் மனைவியின் மருமகள் அவங்களை சரியாக கவனித்துக் கொள்வாள்.
வீரமாக மனைவியை திட்டாதீங்க. மிக மிக அமைதியாக பழி வாங்குங்க உங்கள் மனைவியை! அம்மாவுக்கு இன்னும் இரட்டிப்பாக நல்லது செய்யுங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயமுங்க: அவங்க மாமியாருக்கு நல்லது செய்யும்பொழுது அவங்களுக்கு எரிச்சல் வரவில்லை என்றால்தான் - மனைவிக்கு எதோ கோளாறு என்று அர்த்தம்.
ஏன் பிளாக் செய்கிறேன் எதற்கு செய்கிறேன் எப்படி செய்கிறேன் எங்கு செய்கிறேன் இதையெல்லாம் யோசித்து, வரும் எண்ணங்களை அடுத்த பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.
இந்த ப்ளாகை மேலும் அலங்கரிக்க ஒரு படம் மற்றும் லிங்க் சேர்கிறேன். தலைப்பை கிளிக் செய்தால் அருமையான ஒரு அம்மா கவிதை.
04 மே, 2009
அது ஒரு நிலாக்காலம்.
எழுத்தாளர் சுஜாதாதிரைப்படத்தில் தோன்றும் காட்சி பார்த்ததுண்டா?
ஆமாங்க சமீபத்தில் லோக்சபா சானலில் பார்க்கும் யோகம் கிடைத்தது.
படம்: 'அது ஒரு நிலாக்காலம்'
சுஜாதாஅவர் மனைவியுடன் அந்த தியேட்டருக்கு வருகிறார் காரில். பொடியர்கள், அமரும் புள்ளியும் ப்ளாக் டிக்கெட் விக்கிறார்கள். புள்ளி சல்லீஸாக சுஜாதாவின் பேனாவை லவுட்டுகிறான்.
சீர்திருத்தப் பள்ளியில் அந்த வேலைக்காரப் பையன்கள் விதிவசத்தால் விழுந்த பயன் அது.
அந்த தியேட்டரில் இவர்கள் இந்த நிலைக்கான, இந்தப் பையன்கள் கடத்தியதாக கருதப்பட்ட 'நிலா' நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாவம் சிறுவர்கள். ஒரு நிலாக்காலத்தில் மாத்திரம் அவர்களால் நிலவுடன் விளையாட முடிந்தது.
Great சுஜாதா!
அடுத்த பதிவுக்கும் ஒரு கேள்வி பதில் தயார் பண்ணி விட்டேன் சார்!!
ஆமாங்க சமீபத்தில் லோக்சபா சானலில் பார்க்கும் யோகம் கிடைத்தது.
படம்: 'அது ஒரு நிலாக்காலம்'
சுஜாதாஅவர் மனைவியுடன் அந்த தியேட்டருக்கு வருகிறார் காரில். பொடியர்கள், அமரும் புள்ளியும் ப்ளாக் டிக்கெட் விக்கிறார்கள். புள்ளி சல்லீஸாக சுஜாதாவின் பேனாவை லவுட்டுகிறான்.
சீர்திருத்தப் பள்ளியில் அந்த வேலைக்காரப் பையன்கள் விதிவசத்தால் விழுந்த பயன் அது.
அந்த தியேட்டரில் இவர்கள் இந்த நிலைக்கான, இந்தப் பையன்கள் கடத்தியதாக கருதப்பட்ட 'நிலா' நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பாவம் சிறுவர்கள். ஒரு நிலாக்காலத்தில் மாத்திரம் அவர்களால் நிலவுடன் விளையாட முடிந்தது.
Great சுஜாதா!
அடுத்த பதிவுக்கும் ஒரு கேள்வி பதில் தயார் பண்ணி விட்டேன் சார்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நரியும் திராட்சையும்:
ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...