23 ஜனவரி, 2009

ஒன்றே குறி

நிலாசாரலில் படித்த ஜென் கதை ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்:

ஒரு கண்டிப்பான பாட்டு வாத்தியாரிடம் பாடல் பாடக் கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். முதல் நாள் கற்ற அதே பாடலே, இரண்டாம் நாள் பாடமாகவும், அதற்கடுத்தடுத்த நாட்களின் பாடமாகவும் அமைந்தது. வேறு எதையுமே அவர் சொல்லித் தரவில்லை. ஒரே பாடலையே திரும்பத் திரும்பப் பாடி எரிச்சலாகி வெறுத்துப் போன இளைஞன் அந்த வாத்தியாரை விட்டு ஒருநாள் ஓடியே போனான்.


தற்செயலாக பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த அந்த மண்டபத்திற்குள் நுழைந்தவனை பாடகன் என நினைத்து அவனையும் போட்டியில் சேர்த்துக் கொள்ள, தனக்குத் தெரிந்த அந்த ஒரு பாடலையே அவன் சிறப்பாகப் பாட, மக்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. முதல் பரிசைத் தட்டிச்சென்ற அவனை மற்ற போட்டியாளர்கள் அழைத்து அவனது குருவைப் பற்றி விசாரித்தனர்.

பின்னாளில் அவனே மிகச்சிறந்த பாட்டு வாத்தியாராக ஆனான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதுதான் வெற்றிக்கான வழி.

ஒன்றைப்
பிடித்துக்கொள்ளுங்கள்...


நன்றாக... மிக நன்றாக.

அடுத்த பதிவு: ஒரு சிறுகதை.

30 டிசம்பர், 2008

தேடல்







தேடுகிறோம்.
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!


அடுத்த பதிவாக ஒன்றை பிடித்துக்கொள்கிறேன் .....அதற்கடுத்த பதிவாக ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ........எல்லாம் முதலில் தமிழ் நெஞ்சங்களில் பதித்தது.

01 டிசம்பர், 2008

இரத்தம்.


வாடிக்கையாளர் மீது உட்கார்ந்த,
கொசுவை விசிறி அன்புடன் துரத்திவிட்டான்,

வட்டிக்கடைக்காரன்.


அடுத்த கவிதை.

தேடல்

07 நவம்பர், 2008

இது ஹைக்கூ?


இது ஹை கூ?
- balu g.

'நீ' என்று கூப்பிடவா?
'நீங்கள்'என்று கூப்பிடவா?
அன்னியோனியம் வளரவேயில்லை,
தயக்கத்தில்!


அபிதாப்பச்சன் பதிவு
” Tolerance beyond the point of absurdity is not a virtue but cowardice “

அடுத்த பதிவு :
இரத்தம்


















































































நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...