தவபுதல்வன்
- இவர் நான் compose tamil தளத்தில் சந்தித்த நண்பர்.
ஏதாவது வேலை செய்யும்பொழுது ஒரு துணை கிடைத்தால் அந்த வேலையின் பளு தெரியவே தெரியாது.
அந்த வேலை செய்ய இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது.
இந்த பதிவுக்கு அவர் முயற்சிகள் எனக்கு உற்சாகமளிக்கிறது.
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தேனீ தளத்தைதான், இந்த பூ வட்டமடித்துக்கோண்டிருக்கும்.
இன்று தேனீயில் தமிழ் பாடல் வரிகளுக்கான பக்கத்திற்குச் சென்றேன். பாரதியின் வரிகளை copy செய்தேன்:
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பாரதிதான் கடவுளை தீண்டிய அனுபவத்தை, எவ்வளவு அழகாக சொல்லுகிறார்?
தவபுதல்வனைப் பற்றியும் தேனீயில் நான் சுவைத்த தேனைப் பற்றியும் எனது அடுத்த பதிவில் எழுத ஆசை!