22 செப்டம்பர், 2012

கூகிள் மொழி மாற்றல் பெட்டியில் உங்கள் அனுபவம் எப்படி?



இப்பொழுது கூகிள் translate என்ற பயனை அறிந்து கொண்டுள்ளேன். கூகிள் translate பக்கத்திற்குச் சென்று ஒரு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதி அது இன்னொருப்பெட்டியில் தமிழாவதை அனுபவித்து, அந்த அனுபவத்தை ஒரு பதிப்பாக பதிக்க விரும்புகிறேன். அதன்படி  இது  என்  முதல் படி. படித்தது பிடித்ததா?



இந்த மொழி பெட்டியை பயன்படுத்த ஒரு வலைப்பதிவு உருவாக்க அருமையான. google பக்கம் Google+ இல் உருவாக்கப்பட்டது. என் திட்டம் நான் google பயன்படுத்தி கற்றுகொண்ட விஷயங்களை ஆகும். நான் google பல விஷயங்களை கண்டு வியந்திருக்கிறேன்.
Hootsuite என்னை google பக்கம் உள்ள விஷயங்களை பதிவு செய்ய உதவுகிறது.
நிறைய கற்று கொள்ள வேண்டும்.


அடுத்த பதிப்பில் இன்னொரு முயற்சி செய்கிறேன். அதாவது மின்சாரம் இல்லாதபொழுது செய்ய வேண்டியவைகள் யாது? 

17 ஜூலை, 2012

இப்படி ப்ளாக் பண்ணி என்ன சாதிக்க விரும்புகிறேன்?

ஆமாம் என்ன சாதிக்க விரும்புகிறேன்? 
ப்ளாகை அலங்கரிக்க விரும்புகிறேன். (இதை அகஸ்மாத்தாக  அல்லது தடுமாறி இங்கு விழுந்து, படிக்க நேரிடும் வாசகரே இந்த ப்ளாக் டிசைன் பிடித்துள்ளதா? ) மனதில் தோன்றும் எண்ணத்தை எப்படியாவது பிடித்து  ஒரு வடிவமைப்புக்கு கொணர   முயற்சிக்கிறேன்.
எழுத்துக்களையும் படங்களையும் உபயோகிக்க முயலுகிறேன்.
பெருங்கடலாக விரிந்திருக்கும் இணையகத்திலிருந்து சில கருவிகளை வசதிகளை உபயோகிக்க  கற்றுக்கொள்கிறேன். இதனூடே சுமாராக சிந்திக்க,சிரிக்க முயலுகிறேன். 
யாராவது இந்தப்பதிப்புகளைப் படித்தால் இன்னும் சந்தோஷம்தான்!!


Instapaper, Evernote, Pocket என்று வித விதமான கருவிகளை இணையகத்தில் உபயோகித்து வருகிறேன். இணையகத்தின் முகவரியை தன்னில் store செய்து கொண்டு, தகவல்களை எனக்கு வேண்டிய பொழுது தருகின்றன இந்த அருமையான கருவிகள்.எந்த தகவலை எந்த கருவியில் வைத்தேன் என்ற குழப்ப விளையாட்டு சுவாரஸ்யமாக உள்ளது.

sky-drive, இப்பொழுது googledrive  
போன்றவைகள் எக்கச்சக்கமான இடங்களை  கொடுத்து word  document, excel sheets, presentations, படங்கள்  என்று தகவல்களை பாதுகாத்து வைத்துக்கொள்ள உதவுகின்றன. Dropbox  என்ற கருவியின் மூலம்  இசைகளையும், படங்களையும் பல கணினி கைபேசிளில்  வைத்துக்கொள்ளலாம். ஆபீசில் கிறுக்கியதை  dropbox ல்  தள்ளி வீட்டில் வந்து அதை எழுத்தாக்க முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் வான வெளியில் அல்லது ஆகாயத்தில் அல்லது மேகத்தில் நிறைய, ரொம்ப நிறைய டிஜிடல் சமாச்சாரங்களை Store செய்து வைத்துக்கொள்ளலாம்.

25 GB + 2.5 GB + ...........பல பல GB கள். வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்தாலும் நிரம்பிவழியாத Space கள்.
மொத்தத்தில் எல்லாப் பயன்களையும் பயன்படுத்தப் பாடுபடும் பயனர் அடியேன். சந்தோஷமாக எழுதுவோம். 
இப்பொழுது கூகிள் translate என்ற பயனை அறிந்து கொண்டுள்ளேன். அடுத்தப்பதிப்பாக கூகிள் translate பக்கத்திற்குச் சென்று ஒரு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதி அது இன்னொருப்பெட்டியில் தமிழாவதை அனுபவித்து, அந்த அனுபவத்தை ஒரு பதிப்பாக பதிக்க விரும்புகிறேன். என்னை என்ன கேள்வி கேட்டுக்கொள்ளலாம்? கூகிள் மொழி மாற்றல் பெட்டியில் உங்கள் அனுபவம் எப்படி?

04 மே, 2012

கணினி தொலைகாட்சி பெட்டி அல்லது திரை அரங்கிலோ சினிமா பார்த்தால் மனம் என்ன செய்து கொண்டிருக்கும்

 நல்ல வசனங்களை குறிப்பெடுக்கும். அந்த விதத்தில் சமீபத்திய எனது பதினோரு குறிப்புகள்.

1)நாளிக்கு கிடைக்கிற பால்கோவாவைவிட இன்றைய பப்பிர்மிட்டாய் மேல். கருப்பு கஞ்சா வசனம்

2)மில்லி மீட்டர் மாட்டருக்கு கிலோ மீட்டர் கவலையா? - மெரீனா படத்து வசனம்.


3)ஆறினதை திங்கலாம். நாறினதை திங்கலாமா?  - மெரீனா படத்து வசனம்.


4)காசாலே அடிக்கும் காசுள்ளவந்தான் 'பூஷ்வா ' - பாரதிராஜா பேசும் வசனம் படம்: இரட்டைசுழி 


5)"கதை கேக்கணம்'னு ஆசையா?

பேசாம ரெண்டு சீரியல் பாருங்க" இரட்டைசுழி வசனம்

6)"டீச்சருக்கு ரெண்டு சாக்பீசும் டஸ்டரும் வாங்கிக் கொடு


 எழுதும்பொழுதும் உன் ஞாபகம் வரும்: அழிகும்போழுதும் உன்


 ஞாபகம் வரும்" இரட்டைசுழி வசனம் 


7) மரங்கள் ஓய்வெடுக்க காற்று விடவில்லை. - அன்பே சிவம் பாடல் ஒன்றில் 


8) "நீரில் நீந்திடும் மீன்யினமே..நீ பாலில் வாழ்த்திட முடியுமா?" - நீர்க்குமிழி படப் பாடல் ஒன்று 


9) "Mr . சாமா, உங்களை மாமா'ன்னு கூபபிடறத்துக்கு முன்னால கொஞ்சம் காமா திங்க் பண்ண வேண்டாமா?"  - நீர்க்குமிழி


10) "மறந்தோம் என்பது நித்திரையடா"நீர்க்குமிழி


11) "அனுபவத்தில் நீ பேசுறதா நினைக்கிறாய்; அந்த அனுபவத்தாலேயே நான் பேசாமலிருக்கிறேன்" நீர்க்குமிழி 


இப்படி ப்ளாக் பண்ணி என்ன சாதிக்க விரும்புகிறேன்? என்னும் கேள்விதான் இப்பொழுது இந்தக் குறிப்புகளை எழுதும் பொழுது கேள்வியாக வந்து கொண்டிருக்கிறது . பதிலை ஒரு குறிப்பாக அடுத்தப் பதிப்பில் பதித்து விடுவோமே! 





24 பிப்ரவரி, 2012

சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?

எழுதினேன். இறப்பைப் பற்றிய ஒரு கவிதை. சில நேரங்களில் மறைந்த என் உறவினர்கள் நண்பர்கள் நான் ரசித்த கலைஞ்சர்கள்  எல்லோரும் நினைவுக்கு வருவார்கள். எவனும் எவளும் நிரந்தரமில்லை என்பதை ஒரு வித பயத்துடன் உணர்ந்த பொழுது உருவானது இந்தக் கவிதை.


மறைந்தால்......
அவ்வளவேதான்..........!
"மறைந்தால்"  என்றால் பயம் வருகிறது.
"மறைவும்" "பயமும்" இன்றியமை.


மறைந்தவர்களைப்பற்றி யோசிக்கும்பொழுது.....
புதிதாக மறைந்தவர்கள் தான்,
மிகுந்த துன்பத்துடன் நினைவிற்கு வருகிறார்கள்...


பழைய மறைந்தவர்கள்
மறைந்துவிடுகிறார்கள். 

அட அடுத்த பதிப்பிற்கு ஒரு கேள்வி ரெடியாக உள்ளதே!
 "சினிமா பார்க்கும்பொழுது என்ன செய்வீர்கள்?

நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...